சபையின் அதிகாரம் AUTHORITY OF THE CHURCH ஏழு நட்சத்திரங்களைத் தமது வலது கையில் கொண்டவராக அங்கே நிற்கிறார். வலது கரம் தேவனுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் குறிக்கிறது. 'அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக் கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள் மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலது கரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது.' (சங். 44:3). வலது கரத்தின் வல்லமையில் ஏழு நட்சத்திரங்கள் உள்ளன. இந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு தூதர்களாம் (வெளி:1:26). ஒவ்வொரு காலத்தின் தூதனையும் தேவனுடைய வல்லமையும், ஆதிக்கமும் தாங்குகிறது என்பதை இது குறிக்கிறது. தூதர்களெல்லோரும் பரிசுத்த ஆவியின் வல்லமையைப் பெற்று தேவ வார்த்தையோடு புறப்பட்டுச் செல்லுகின்றனர். அவர்கள் தேவனின் ஒளியைப் பிரதிப்பலிக்கிறபடியால் அவர்கள் நட்சத்திரங்களாகக் காட்சியளிக்கின்றனர். நட்சத்திரங்களைப் போலவே அவர்களுக்குச் சுய ஒளி இல்லை. மனிதர்கள் அவர்கள் வெளிச்சத்தில் நடக்கத்தக்கதாக அவர்கள் அக்கினி ஜீவாலையை மூட்டுவதில்லை. (ஏசாயா 50:11). எல்லாரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களானபடியால் (ரோமர் 3:20), பாவம் நிறைந்த இந்த உலகத்தின் அந்தகாரத்தில் அவர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர். இந்த ஏழு தூதர்களும் மக்களுக்குத் தேவனை அறிமுகப்படுத்துகின்றனர். அவர்களை ஏற்றுக்கொள்கிறவன் அவர்களை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் (யோவான் 13:20). அவருடைய அதிகாரத்தைக்கொண்டு அவர்கள் எல்லாவற்றையும் செய்கின்றனர். கர்த்தரும் தேவத்துவத்தின் சகல வல்லமையோடும் அவர்களைத் தாங்குகிறார். ஏழு சபை காலங்களின் வியாக்கியானம் 120. இப்பொழுது நீதிமன்றம், 'இதைச் செய்தால் இந்த தண்டனை' என்று தீர்ப்பு கூறினால், அது நீதிமன்றத்தின் தீர்ப்பானதால், அதன் சட்டம் அந்த தீர்ப்பை அமுல்படுத்துகின்றது. தேவன் ஒன்றைப் பேசுகிறார், அது ஒரு பிரமாணம் ஆகும்; அந்த பிரமாணத்தை ஒரு விசுவாசிக்கு அமல்படுத்த (ஆமென்) பரிசுத்த ஆவி இங்கே இருக்கிறது. அவ்விதமாக செய்யப்பட நீங்கள் முன்குறிக்கப்பட்ட வர்களாய் இருக்க வேண்டும். அது விசுவாசிக்கு மாத்திரமே உரியது. நீங்கள் விசுவாசியின் சின்னத்தை அணிந்து கொண்டிருப்பது அவசியம். “உங்களிடம் வல்லமை உள்ளதா?' என்று சிலர் கேட்கலாம். இல்லை, ஆனால் எங்களிடம் அதிகாரம் உள்ளது வல்லமையல்ல, அதிகாரம். எதைச் செய்யவும் எங்களிடம் போதிய வல்லமை கிடையாது. 121. சில நாட்களுக்கு முன்பு, லூயிவில்லில் நின்று கொண்டிருக்கும் போலீஸ்காரனைக் குறித்து உங்களிடம் கூறினேன், அவன் உருவத்தில் என்னைக் காட்டிலும் சிறியவன். அவனுடைய தொப்பி அவனுடைய காதுகளை மூடியிருக்கும். அவனுடைய உடுப்பு பாதிக்குமேல் வெளியே தொங்கிக் கொண்டிருக்கும். அவன் தொப்பியை அணிந்து, கையில் ஒரு சிறு கோலுடனும் ஒரு சிறு ஊதலுடனும் நின்று கொண்டிருக்கிறான். சக்தி வாய்ந்த கார்கள் ஜும், ஜும் என்று மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றன. (அவைகளில் சிலவற்றிற்கு முன்னூற்று ஐம்பது குதிரைகளில் சக்தி கொண்டதாய் இருக்கும்) அந்த சிறு உருவம் படைத்தவன் தன் சொந்த பெலத்தினால், ஓடும் ஒரு சிறு குதிரையைக்கூட பிடித்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக முடியாது. ஆனால் பளபளக்கும் காவற்படை சின்னத்தை அணிந்தவனாய், அவன் தெருவில் நின்றுகொண்டு, ஊதலை ஊதி கையைக் காட்டும் மாத்திரத்தில், சக்திவாய்ந்த அந்த பெரிய கார்கள் (சில கார்களுக்கு 300 குதிரை சக்திகள் உள்ளன) உடனே நின்று விடுகின்றன. அது மனிதனுடைய வல்லமையல்ல, அவன் பெற்றுள்ள அதிகாரம். 122. சபையும் அவ்வாறேயுள்ளது. அது பரிசுத்த உருளுபவர் கொண்ட கூட்டமாயிருக்கலாம். நீங்கள் கேலியாக அதை என்னவெண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால் அது அதிகாரத்தைப் பெற்றுள்ளது. ஹூ-ஹூம். அது தான் அதன் பின்னால் இருக்கின்ற அதிகாரமாகும். அது தான் அதை கிரியை செய்ய வைக்கிறது. மணவாட்டி மரம் திரும்ப அளிக்கப்படுதல், ஏப்ரல் 22, 1962 தேவனுடைய வெளிப்படுத்துதல் பிசாசின்மேல் அதிகாரத்தைக் கொடுப்பதால், இதைக் கேட்பவனோ, வாசிப்பவனோ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பான் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஏழு சபை காலங்களின் வியாக்கியானம் வெளி: 1:6. '...தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு என்றென்றைக்கும் மகிமையும் வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.' ‘நம்மை... ஆக்கினார்’ சில சத்தியங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பது அவசியாயிருக்கிறது. அவைகளில் இது ஒன்றாகும். அவர் நம்மை ஆக்கினார். நம்முடைய இரட்சிப்பு கர்த்தருடைய கிருபையால் உண்டாகிறது. அவர் நம்மை ஒரு நோக்கத்தோடு மீட்டார். ஒரு நோக்கத்தோடு நம்மைக் கிரயத்திற்கு வாங்கினார். இப்பொழுது நாம் ஆவிக்குரிய ராஜாக்கள். அவர் சிங்காசனத்தில் வீற்றிருந்து அரசாட்சி செய்யும் காலத்தில் நாமும் அவரோடு கூட இவ்வுலகத்தை அரசாளுவோம். ஆனால் இப்போது ஆவிக்குரிய ராஜாக்களாக ஆவிக்குரிய ராஜ்யத்தை அரசாட்சி செய்கிறோம். 'அல்லாமலும் ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன் மூலமாய் மரணம் ஆண்டு கொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாக ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே' (ரோமர் 5:17). இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவரு மாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்' (கொலோ. 1:13). இப்பொழுதே நாம் கிறிஸ்துவோடு அரசாண்டு, பாவம், உலகம், மாம்சம், பிசாசு இவைகளின் மேல் அதிகாரம் செலுத்துகிறோம். கிறிஸ்து நமக்குள் வாசம் பண்ணி தம்முடைய சித்தத்தின்படி எல்லாவற்றையும் செய்கிறபடியால், நாம் அவரையே வெளிப்படுத்தி அவருடைய துதியையும் மகிமையையும் உலகத்திற்குக் காண்பிக்கிறோம். ஆம், இப்பொழுதே இயேசுகிறிஸ்துவோடு உன்னதங்களில் உட்கார்ந்திருக்கிறோம் (எபே 2:7). ஏழு சபை காலங்களின் வியாக்கியானம் 219. நான் ஜெபர்ஸின்வில்லில் காவற்படையில் சேர்ந்து, எல்லா அதிகாரத்தோடும் தெருவில் நடக்க நேரிட்டால், இந்த பட்டினத்தைக் குறித்து வெட்கப்பட மாட்டேன். காவற் படையிலுள்ள ஒருவன் என்னும் முறையில் அந்தப் பட்டினத்தின் ஒரு பாகமாக இருந்து, ஒழுங்கையும் நல் நடத்தையையும் நான் நிலைநாட்டுவேன், யாராகிலும் ஒருவன் சிவப்பு விளக்கைக் கடந்து செல்ல நேரிட்டால், தவறு செய்த அவன் நீதிமன்றத்துக்கு வரும்படியாக அவனிடம் ஒரு சீட்டைக் கொடுக்க நான் வெட்கப்படமாட்டேன். அது என் வேலை. அதற்காக நான் சம்பளம் வாங்குகிறேன். பட்டினம் கொடுக்கும் சம்பளத்தால் நான் வாழ்கிறேன். அந்த பட்டினம் எனக்கு அதிகாரம் அளித்துள்ளது. எனவே ஒருவன் குடித்திருந்தாலும், என்ன தவறு செய்திருந்தாலும், அவர்கள் என்னை ஆதரிப்பார்கள். நான் காவற்படையை சேர்ந்தவ னாதலால், எனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு நான் என் கடமையை செய்கிறேன். நீங்களும் சட்டங்களைக் கைகொள்ள வேண்டியவர்காளாயிருக்கிறீர்கள். 220. அது போன்று, நான் கிறிஸ்தவனாக இருந்து, ஆவியினால் நிறைந்து, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் சாட்சியை அணிந்துகொண்டு அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பேனானால், எந்த பிசாசும் நம்மை இங்கும் அங்கும் தள்ளி, 'இதை செய்யாதே, அதை செய்யாதே' என்று கூற அனுமதியாதேயுங்கள். நீங்கள் அதை செய்யுங்கள். தேவன் உங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளார். 221. பாருங்கள், நமக்கு வல்லமை கிடையாது. அந்த காவற்படைகாரனுக்கு ஒரு காரை பிடித்து நிறுத்தக்கூடிய பெலன் கிடையாது. அதன் மோட்டார் முன்னூறு அல்லது நானூறு குதிரை சக்தியைக் கொண்டதாயிருக்கும். அவனால் என்ன செய்ய முடியும்? ஆனால் அவனுக்கு அதிகாரம் உள்ளது. 222. அதுதான் சபை, இயேசு கிறிஸ்துவின் உயித்தெழுதலின் மூலமாகவும் அவருடைய வாக்குத்தத்தத்தின் மூலமாகவும் நாம் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறோம். அல்லேலூயா! 'நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். அதைக்காட்டிலும் அதிக கிரியைகளைச் செய்வீர்கள்.' வெட்கப்படுதல், ஜூலை 11, 1965 நமது ஆயுதம் இயேசு கிறிஸ்துவே. ஆம், ஐயா. அதை அவை காணும்போது எல்லா பிசாசுகளும், ‘பிரேக்’ குகள் போடுகின்றன. தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை அது உண்மையான பரிசுத்த ஆவியின் அபிஷேகம், ஆமென்! அவருடைய உயிர்தெழுதலின் சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொண்டு தேவனுடைய சிம்மாசனத்திலிருந்து நேரடியாகப் புறப்பட்டு வருவதை காணும்போது! ஆமென். 202. நீங்கள் பெலவான்கள் என்பதனால் அல்ல, நீங்கள் ஒன்றுமில்லை. ஆனால் உங்ளுக்கு பின்னால் இருப்பது தான். ஏன்? நீங்கள் மரித்திருக்கிறீர்கள். நீங்கள் இராணுவத்தில் சேர்ந்து விட்டீர்கள். நீங்கள் காவற்படையில் சேர்ந்து விட்டீர்கள். நீங்கள் சட்டத்தை அமுல்படுத்தி, பிசாசுகளை கட்டுப்படுத்தப் போகின்றீர்கள். அது உண்மை, நீங்கள் காவற்படையில் இருக்கின்றீர்கள்; காவற்படை முழுவதுமே உங்களை ஆதரிக்கிறது. நீங்கள் மரித்தவர்களாக எண்ணப்படுகின்றீர்கள். நீங்கள் ஒன்றுமில்லை. நீங்கள் ஒன்றையும் நிறுத்த முடியாது. ஆனால் நீங்கள் உயிரோடெழுந்து கிறிஸ்து இயேசுவில் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருப்பதால், உங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பிசாசு அதை கண்டு கொள்கிறது. அப்பொழுது கைகள் உயர்த்தப்படும்போது, எல்லாமே 'பிரேக்'குகள் போட்டு நிறுத்துகின்றன. 207. தேவனே, அதிகாரத்தின் சின்னம் ஒரு ஸ்தாபனத்தின் பெயரல்ல. அது வல்லமை தனிப்பட்ட ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் காணப்படும் உயிர்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமை. 213. நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறாமலிருந்தால் இங்கு தண்ணீர் நிறைந்த குளம் ஒன்று உள்ளது. நீங்கள் தண்ணீரை விட்டு வெளிவரும் போது, நீங்கள் புது ஜீவனுடன் கிறிஸ்துவுடன் நடக்க எழும்புகிறீர்கள். நீங்கள் அப்பொழுது மரித்து விடுகிறீர்கள். நீங்கள் ஒருபோதும்... உங்கள் கோபமும் எல்லாமும் போய் விடுகிறது. நீங்கள் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாயிருக்கிறீர்கள். அப்பொழுது அவர் பரிசுத்த ஆவியினால் உங்களை எழுப்பி அவரோடு கூட உன்னதங்களில் - இவ்வுலகின் எல்லா சக்திகளுக்கும் மேலாக - உட்காரும்படி அருள்செய்கிறார். கிறிஸ்தவ மார்க்கமும் அதற்கெதிராக விக்கிரகாராதனையும், டிசம்பர் 17, 1961 69. உங்களது மாம்சத்தின்படியான தகப்பனிடத்தி லிருந்து இயற்கை பிரகாரமான ஜீவனும், சிறப்பு தன்மைகளும் உங்கள் தகப்பனால் நீங்கள் ஜெநிக்கப்படும்போது, உங்களுக்குள் எவ்வாறு சுதந்திரமாக வருகிறதோ, அதைப்போலவே, உலகத் தோற்றத்திற்கு முன்னர் முன் குறிக்கப்பட்ட தேவ ஆவியால் பிறந்தவனும் இருக்கிறான். தேவனுடைய சர்வ வார்த்தையும், இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படும் மனித சரீரத்திற்குள்ளாக உருவெடுத்தபோது, அங்கேதானே, தேவன் அவரில் எனது பாவத்திற்காக நான் செலுத்த வேண்டிய கடனைச் செலுத்தித் தீர்க்கும்படி செய்தார். பின்பு தேவன் என்னை அவரோடு உயிர்த்தெழுதலில் எழும்பச் செய்தார். இப்பொழுது நாம் அவரோடு ஒவ்வொரு பிசாசின் மேலும் வல்லமையோடும் அதிகாரத்தோடும் உட்கார்ந்திருக்கிறோம். நீங்கள் மாத்திரம் தேவன் அளித்திருக்கிறவற்றை விசுவாசிக்கக் கூடுமானால்! ஆனால் நீங்கள் அங்கு அமர்ந்திருக்காவிடில் அதைப் பெற்றிருக்கவில்லை. நீங்கள் அங்கு அமர்ந்திருப்பீர்களானால், அதன்பிறகும் விசுவாசியாமல், கிரியை செய்வதற்கு அஞ்சுவீர்களானால், நீங்கள் ஒருபோதும் அதை பயன்படுத்தமாட்டீர்கள். ஆனால் நீங்கள் அங்கு அமர்ந்திருப்பீர்களானால், நீங்கள் செய்யவேண்டியவற்றைக் குறித்து முன்குறிக்கப் பட்டுள்ளதால், அதை நீங்கள் உபயோகிப்பீர்கள். இப்பொல்லாத காலத்தின் தேவன், ஆகஸ்ட் 1, 1965 70. நான் என்ன சொல்ல முயற்சிக்கிறேன் என்று காண்கிறீர்களா? இந்தக்காலையிலே உங்களுடன் மிகவும் தெளிவாகப் பேசினேன். மணவாட்டி எனும் ஜீவனுள்ள சபையில் ஜீவனுள்ள தேவனுடைய அதிகாரத்தை நீங்கள் காணவில்லையோ? நோயாளிகள் சுகமடைகிறார்கள், மரித்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கிறார்கள், குருடர்கள் பார்வையடை கிறார்கள், சுவிசேஷம் அதன் வல்லமையோடு அறிவிக்கப்படுகிறது. ஏனென்றால் செய்தியும் செய்தியாளரும் ஒன்றாக இருக்கிறார்கள். வார்த்தையானவர் சபைக்குள்ளும் தனி நபருக்குள்ளும் இருக்கிறார். ஏற்ற காலத்தின் ஆவிக்குரிய ஆகாரம், ஜூலை 18, 1965 *******